தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி நிலம் மீட்பு


தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி நிலம் மீட்பு
x

தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி நிலம் மீட்கப்பட்டது.

திருச்சி

குத்தகை பாக்கி செலுத்தவில்லை

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் 6 இடங்களில் அமைந்துள்ள 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வருவாய் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும், அந்த தொகை செலுத்தப்படவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி, செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கோவில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடியாகும்.

நிலம் மீட்பு

இதேபோல் துவாக்குடியில் 2 இடங்களில் அமைந்துள்ள 3 ஏக்கர் 28 சென்ட் நிலமும் கையகப்படுத்தப்பட்டு உதவி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். இதன்படி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான மொத்தம் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.


Next Story