கடலில் தத்தளித்த 2 சிறுவர்கள் மீட்பு


கடலில் தத்தளித்த 2 சிறுவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:45 PM GMT)

கடலில் தத்தளித்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் துறைமுக பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று ஏராளமான சிறுவர்கள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டாக கடலின் உள்ளே சற்று தூரம் சென்று குளித்த அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் தவசிபாண்டி (வயது 12), பால்பாண்டி மகன் வசந்தன் (12) ஆகியோர் திடீரென கடல் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் வேகமாக ஓடி சென்று கடலில் குதித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த 2 சிறுவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story