சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம்


சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருச்சி

திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று 18-வது சமரச தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பாபு தலைமை தாங்கினார். பின்னர் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நீதிபதி பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோர்ட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திருச்சி மாநகராட்சி அலுவலகம் வழியாக சென்று மீண்டும் கோர்ட்டில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story