ரேஷன் கடை ஊழியரின் மனைவி-2 மகள்கள் மாயம்


ரேஷன் கடை ஊழியரின் மனைவி-2 மகள்கள் மாயம்
x

ரேஷன் கடை ஊழியரின் மனைவி, 2 மகள்களுடன் மாயமானார்.

விருதுநகர்


விருதுநகர்-மிசலூர் ரோட்டில் உள்ள பெருமாள் நகரில் வசிப்பவர் பாலமுருகன் (வயது 40). ரேஷன் கடை விற்பனையாளரான இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் பாலமுருகன், மகேஸ்வரி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வடமலாபுரம் அருகே மகேஸ்வரி இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததால் படுகாயமடைந்ததார்.

இதையடுத்து மகேஸ்வரி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர்களது 2 மகள்களும் உடனிருந்தனர். இந்தநிலையில் பாலமுருகன் செலவுக்கு பணம் எடுப்பதற்காக வீட்டிற்கு வந்து விட்டு மறுநாள் காலை சென்ற போது அவரது மனைவி மகேஸ்வரியும், 2 குழந்தைகளும் மாயமாகிவிட்டனர். இது பற்றி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story