செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

செங்கல்பட்டு-கடம்பூர், செய்யூர் -மடயம்பாக்கம், மதுராந்தகம் -செம்பூண்டி, திருக்கழுக்குன்றம் - நெம்மேலி, திருப்போரூர்-அகரம்

வண்டலூர்-போலச்சேரி

மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில், ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம். முகவரி மாற்றம். புதிய ரேஷன்கார்டு நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story