ராணி வாய்க்காலை சீரமைக்கும் பணி


ராணி வாய்க்காலை சீரமைக்கும் பணி
x

ராணி வாய்க்காலை சீரமைக்கும் பணி

தஞ்சாவூர்

தஞ்சை இர்வீன் பாலம் அருகே ராணி வாய்க்காலை சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பழமையான வாய்க்கால்

தஞ்சாவூர் நகரில் பெய்யும் மழைநீரனாது, அப்போது அமைக்கப்பட்ட ராணி வாய்க்கால் மூலம் வடிந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள கீழவாசல் அழகி குளத்துக்கு சென்றது.காலப்போக்கில் நகரின் விரிவாக்கப் பகுதிகளால் இந்த வாய்க்காலின் நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போனது. அதே போல் அழகி குளமும் தூர்ந்து போனது.

இந்தநிலையில் பொதுமக்கள் அழகிகுளத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டு தூர்வாரி குளத்தை சீரமைத்தனர். இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சியினர் ராணி வாய்க்காலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூர்வார முடிவு செய்து, வாய்க்கால் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இர்வீன் பாலத்திற்கு அடியில்

இந்த ராணி வாய்க்கால் கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே இர்வின் பாலம் அருகில் ஆற்றுக்கு கீழ் பகுதியில் செல்கிறது. இர்வின் பாலத்தை கடந்தாண்டு இடித்துவிட்டு மீண்டும் புதிதாக அகலப்படுத்தி கட்டி முடிக்கப்பட்டது. அப்போது ராணி வாய்க்காலின் நீர் வழித்தடத்தையும் புதுப்பிக்க முயன்றனர். ஆனால் ஆற்றில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை முடிக்க முடியவில்லை. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஆற்றின் குறுக்கே ராணி வாய்க்கால் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து வாய்க்கால் இருக்கும் இடத்தை பொக்லின் எந்திரம் தோண்டி கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாநகராட்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story