சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story