திருமருகல் பகுதியில் 2-வது நாளாக மழை


திருமருகல் பகுதியில் 2-வது நாளாக மழை
x
தினத்தந்தி 8 Sep 2023 7:15 PM GMT (Updated: 8 Sep 2023 7:15 PM GMT)

திருமருகல் பகுதியில் 2-வது நாளாக மழை பெய்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு பரவலாக மழை பெய்தது. அதேபோல நேற்று முன்தினம் இரவு (7-ந் தேதி) தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், குருவாடி, போலகம், திருப்புகலூர், வவ்வாலடி, ஆலத்தூர், குத்தாலம், எரவாஞ்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 1 மணிநேரம் மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது.


Next Story