ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமை தாங்கி ரெயில்வே தனியார்மயத்தினால் ஏற்படும் பாதகங்களையும், புதிய பென்ஷன் திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களையும் தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துரைத்து விளக்கி பேசினார். இதில் செயல் தலைவர் பழனிவேல், விழுப்புரம் கிளை நிர்வாகிகள் ரகுநாத், ஸ்ரீதர், ஜம்பு, விஜயபாஸ்கரன், பெரியண்ணன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story