ரெயில் பாதையில் தொழிலாளி பிணம்


ரெயில் பாதையில் தொழிலாளி பிணம்
x

ரெயில் பாதையில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-விருதுநகர் ரெயில்பாதையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை துண்டான நிலையில்கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் பாதையில் இறந்து கிடந்த நபர் யார்? என விசாரணை நடத்தினர். இதில் திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (வயது 50) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தொழிலாளியான முருகனின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் ரெயிலில் சிக்கி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story