தூய்மை பாரத திட்ட விழிப்புணர்வு நடைபயணம்


தூய்மை பாரத திட்ட விழிப்புணர்வு நடைபயணம்
x

தூய்மை பாரத திட்ட விழிப்புணர்வு நடைபயணம்

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் ஒன்றியம் வயலூர் ஊராட்சியில் தூய்மை பாரத திட்ட விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் பதாகைகை ஏந்தியவாறு வயலூர், கீழ வயலூர், பூங்குடி, களப்பாலகரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று தூய்மை பாரத திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, ஊராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.


Next Story