சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா


சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா
x

விருதுநகர் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்


விருதுநகர் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

விருதுநகர் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி- அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண வைபவம்

திருவிழாவை முன்னிட்டு தினமும் பெருமாள் பல்லக்கு, சந்திர பிரபை, அன்னம், குதிரை, சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 25-ந் தேதி மாலை நடைபெறுகின்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்த ஜன சபையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story