நூதன முறையில் ஆர்ப்பாட்டம்


நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
x

கும்பகோணம் அருகே கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே தாராசுரம் பஸ் நிலையத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கும்பகோணம் மாநகர குழு சார்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் சுமதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மண் அடுப்பில் விறகுடன் பானை வைத்தும் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.


Next Story