துணை ஆணையரை முற்றுகையிட்ட அனைத்து கட்சியினர்


துணை ஆணையரை முற்றுகையிட்ட அனைத்து கட்சியினர்
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:46 PM GMT)

துணை ஆணையரை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கோவிலின் மூன்றாம் பிரகார மேடையில் வைத்து புரோகிதர்கள் பல பரிகார பூஜைகளை செய்து வருகின்றனர். ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாகவும், கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் மேடை பகுதியில் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் இருக்கைகளுடன் கூடிய காத்திருப்பு அறை அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் நேற்று துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் மூன்றாம் பிரகாரத்தில் மேடையில் பூஜை செய்ய அனுமதி கிடையாது என புரோகிதர்களிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு ராமேசுவரம் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து துணை ஆணையரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பூஜை செய்ய புரோகிதர்களுக்கு கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் அருகிலேயே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.


Next Story