தர்மபுரியில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:45 PM GMT)
தர்மபுரி

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி ஜாக்டோ, ஜியோ சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ, ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், நிர்வாகிகள் புகழேந்தி, இளவேனில், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் துரைராஜ், முருகன், காமராஜ், சாமிநாதன், மாதேஸ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள், வனப்பாதுகாவலர்கள், வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் திட்ட ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story