காட்டுமன்னார்கோவிலில்பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காட்டுமன்னார்கோவிலில் பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவிலில் ஒன்றிய, நகர பா.ம.க. சார்பில் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாத தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அன்பு சோழன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தவசீலன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து பேசினர். இதில் மாவட்ட பசுமைத்தாயகம் ராஜவேல் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story