11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை


11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை
x

கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு பாதிப்பு

பேட்டு பார்டருடன் கூடிய சேலை, வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, ஜமுக்காளம், கம்பளி, சால்வை உள்ளிட்ட ரகங்களில் குறிப்பிட்ட தொழில்நுட்ப குறியீடுகள் உடைய ரகங்களை விசைத்தறையில் உற்பத்தி செய்யக்கூடாது என சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக தனியார் விற்பனை நிலையங்களில் ஜவுளி ரகங்கள் மலிவு விலையில் காட்சிப்படுத்தப்பட்டு கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்டது என விளம்பரப்படுத்தி விற்பனை மேற்கொள்வதாக தெரிவித்த கைத்தறி நெசவாளர்கள் இதன் காரணமாக தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.

பறக்கும் படைகள்

இதனை தவிர்க்கும் வகையில் கைத்தறி துறையால் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்படி பறக்கும் படைகள் மாவட்டத்தில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கு ஆய்வு மேற்கொள்ளும் சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி மேற்கொள்ளும் விசைத்தறியாளர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும்.

நலத்திட்டங்கள்

மேலும் தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவாளர்களின் இடர்பாடுகளை களைந்து விடும் வகையில் தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலைவாய்ப்பையும் அதற்கான ஊதியமும் பெற்று பயன்பெறலாம்.

சங்க உறுப்பினருக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நெசவாளர், முதியோர், ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதியதிட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், இலவச வீடு கட்டும் திட்டம், இலவச மின்சார திட்டம், நெசவாளர் முத்ரா கடன் திட்டம், மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா ஆகிய நலத்திட்டங்கள் பெற்று வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story