வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:46 PM GMT)

வடகீரனூரில் வேளாண் இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

வடக்கீரனூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா தலைமை தாங்கினார். சங்கராபுரம் ஒன்றியக்குழு துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story