காரில் பேராசிரியர் பிணம்


காரில் பேராசிரியர் பிணம்
x

விருதுநகரில் காரில் பேராசிரியர் பிணமாக மீட்கப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சசிகலா (வயது 42). இவர் திருமங்கலத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கண்ணன் (44). இவர் வேறு ஒரு கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவில், இயக்குனராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று சசிகலா வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், கண்ணனை தொடர்பு கொண்டு பேசியபோது உடல் நலம் சரியில்லாததால் கல்லூரியில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

மாலையில் சசிகலா கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது கண்ணன் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கண்ணனை தேடிய போது அவர் வீட்டில் உள்ள கார் ஷெட்டில் காரில் ஸ்டீயரிங்கில் கவிழ்ந்தபடி இருந்தார். கார் கதவு பூட்டப்படவில்லை. காரில் ஏ.சி இயங்கி கொண்டிருந்தது.

கண்ணன் முகத்தை திருப்பிய போது உடலில் அசைவு எதுவும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து சசிகலா தனது காரில் கண்ணனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன் காருக்குள்ளேயே இறந்து இருக்கலாம் என தெரிகிறது. அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம், என தெரிவித்தனர்.


Related Tags :
Next Story