பொங்கல் பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்ற பெண்கள்


பொங்கல் பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்ற பெண்கள்
x
தினத்தந்தி 28 Jan 2023 6:45 PM GMT (Updated: 28 Jan 2023 6:45 PM GMT)

பொங்கல் பொருட்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் சலவை தொழிலாளர் சங்கம் சார்பில் தை மாதம் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்கள், பொங்கல் பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பால் மற்றும் பன்னீர் உள்பட 18 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மேலும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கோலப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை முதுகுளத்தூர் வண்ணார் தெரு சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story