18-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


18-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x

வாலாஜாவில் வருகிற 18-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது,

ராணிப்பேட்டை

வாலாஜாவில் வருகிற 18-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது,

ராணிபேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஜி.கே. உலகப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாலாஜா அரசு அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பணிநியமனம் செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சிமுதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி, நர்சிங், என்ஜினீயரிங், எம்.பி.ஏ. உள்ளிட்ட கல்வித் தகுதி உடைய வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலையினை தேர்வு செய்து பயன் பெறலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ள வேலை நாடுநர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பயோடேட்டா, மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story