தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
x

ராணிப்பேட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில், இந்த மாதத்தில் வருகிற 19-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story