வாலாஜாவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


வாலாஜாவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x

வாலாஜாவில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

ராணிப்பேட்டை

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜீ.கே. உலக பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயின்றவர்கள் இந்த முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பினை பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story