பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கல்


பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கல்
x

சிவகிரியில் பொதுமக்களுக்கு தேசிய கொடி இலவசமாக வழங்கப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகிரியில் நகர பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக தேசிய கொடி வழங்கப்பட்டது. இதனை நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தொடங்கி வைத்தார். இதில் மன்ற துணைத் தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், செந்தில் வேல், தலைமை எழுத்தர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின் ராஜாசிங், சுகாதார மேற்பார்வையாளர் குமார், அலுவலர்கள் மாடசாமி, சக்திவேல், தினேஷ் குமார், செல்லப்பன், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story