விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற வேதாந்தநாயகி உடனாகிய விஸ்வநாதர் கோவில் உள்ளது. மறுபிறவி போக்கும் தலமான இங்கு பிரதோஷ காலத்தில் சூரியவாசல் திறக்கப்படுவது வழக்கம். பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் நேற்று வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமி, அம்மன் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், திரவியம், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு பூஜைகளை சதீஷ் குருக்கள் என்கிற சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் சூரியவாசல் வழியாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் ருத்ராட்ச பிரசாதமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story