சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு


சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இ்ந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு அதிகாலை முதல் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மலைப்பாதை வழியாக சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story