சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து கேட் திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றனர். பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story