சதுரகிரி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு


சதுரகிரி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
x

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,


சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரதோஷ வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் மாசி மாத சனிப்பிரதோஷ வழிபாட்டிற்காக நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்தனர்.

பக்தர்கள் மலை ஏற காலை 6.30 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். வனத்துறை கேட் திறக்கப்பட்டு, பக்தர்கள் அடிவாரப்பகுதியில் இருந்து மலைப்பாைத வழியாக சதுரகிரி கோவிலுக்கு நடந்து சென்றனர்.

சிறப்பு பூஜை

பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story