மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்


மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 Jun 2022 6:45 PM GMT (Updated: 2 Jun 2022 6:45 PM GMT)

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

செம்பனார்கோவில்

அதேபோல் செம்பனார்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்ணாப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், எடுத்துக்கட்டி சாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர். டி.மணல்மேடு, மாத்தூர், கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், மேலப்பாதி, கீழையூர், கருவாழக்கரை, காளகஸ்திநாதபுரம், திருச்சம்பள்ளி, ஆக்கூர், ஆக்கூர் கூட்டுரோடு, அன்னப்பன்பேட்டை, மடப்புரம், மாமாகுடி, சின்னங்குடி, சின்னமேடு, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவி, செம்பதனிருப்பு, மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி, பரசலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story