இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
நாமக்கல்

ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டு பாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தா கோவில், டி.ஜி.பாளையம் பள்ளி கவுண்டம்பாளையம், ஆனங்கூர், பழைய பாளையம், புளியம்பட்டியம் பாளையம், ஆண்டிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் குமாரபாளையம் வட்டம் சமயசங்கிலி, ராசிபுரம் தாலுகா மெட்டாலா ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டை பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திப்பாளையம், பள்ளிப்பாளையம் அக்ரகாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சத்தி ரோடு அக்ரகாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு.

மெட்டாலா, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளபட்டி, முள்ளுக்குறிச்சி, பெரிய கோம்பை, பெரப்பன்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, கரியாம்பட்டி, வரகூர் கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால், ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story