அய்யர்மலை, மாயனூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


அய்யர்மலை, மாயனூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

அய்யர்மலை, மாயனூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர், பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே 10 துணை மின்நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் குளித்தலை நகரம் உள்பட சுமார் 137 கிராம பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என குளித்தலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story