நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

அய்யம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதி அக்ரஹாரம், ஈச்சங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, வழுத்தூர், இளங்கார்குடி, அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, பசுபதிகோவில், மாத்தூர், வீரசிங்கம் பேட்டை, நெடார், வயலூர், ராமாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய பாபநாசம் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story