நெல்லிக்குப்பம், செம்மண்டலம் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்


நெல்லிக்குப்பம், செம்மண்டலம் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:46 PM GMT)

நெல்லிக்குப்பம், செம்மண்டலம் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கடலூர் செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நத்தப்பட்டு, குமராபுரம், திருவந்திபுரம், வரக்கால்பட்டு, பில்லாலி, அழகிய நத்தம், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம், களையூர், இராண்டாயிர வளாகம், திருப்பணாம்பாக்கம், எம்.பி.அகரம், நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.


Next Story