கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கறம்பக்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கறம்பக்குடி, தீத்தான்விடுதி, குழந்திரான்பட்டு, ராங்கியவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி, மருதன்கோன்விடுதி, பந்துவக்கோட்டை, வாண்டான் விடுதி, ரெகுநாதபுரம், முதலிப்பட்டி, தட்டாமனைபட்டி, கீராத்தூர், பாப்பாபட்டி, பல்லவராயன்பத்தை, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்திகாடு, கரு தெற்குதெரு, நெடுவாசல், கருவடதெரு, குரும்பிவயல், குருவாடி, திருவோணம், நெய்வேலி, அரங்குளவன்மஞ்சுவயல் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story