அறிவிக்கப்படாத மின்வெட்டு; விவசாயிகள் அவதி


அறிவிக்கப்படாத மின்வெட்டு; விவசாயிகள் அவதி
x

கமுதி கிராம பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி கிராம பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

புகார்

கமுதியை அடுத்துள்ள நீராவி, என்.கரிசகுளம், கிளாமரம், தோப்பநத்தம், ராமசாமிப்பட்டி, கே.எம்.கோட்டை, எம்.எம். கோட்டை, சின்ன கரிசல்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தினசரி 8 மணி முதல் 10 மணிவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படு கிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நிலத்துக்கு தண்ணீர் பாயும்போது திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டு 8 மணி நேரத்திற்கு மேலாக காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பயிர்களுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.

கோரிக்கை

மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் தலையிட்டு தடையில்லாத மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தபகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story