பாலிடெக்னிக் மாணவர் மாயம்


பாலிடெக்னிக் மாணவர் மாயம்
x

பாலிடெக்னிக் மாணவர் மாயம் ஆகினர்

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள தளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் விக்னேஷ் (வயது 17). இவர் காளியாளம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி காலை கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் மாலையில் வீட்டிற்கு வரவில்லை. இதனால் விக்னேசின் பெற்றோர் அவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து மாயமான விக்னேசை தேடி வருகின்றனர்.


Next Story