மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பொள்ளாச்சி அணி சாம்பியன்


மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பொள்ளாச்சி அணி சாம்பியன்
x

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பொள்ளாச்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கரூர்

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இதில் சென்னை, மதுரை, பொள்ளாச்சி, கரூர், ஈரோடு உள்பட 8 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் பொள்ளாச்சி அணியும், கரூர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி போட்டியில் 25-18, 25-18, 25-22 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. 2-ம் பரிசை கரூர் அணியும், 3 மற்றும் 4-ம் பரிசை சென்னை அணிகளும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினார்.


Next Story