மணலியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


மணலியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மணலியில் போலீஸ்காரர் தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரனணை நடத்தி வருகின்றனர்.

சென்னை


மணலி காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சிவக்குமார்( வயது 35).இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர்.

சிவக்குமார் குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த வாரம் சங்கீதா குழந்தைகளை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஒரு வாரமாக சிவகுமார் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சங்கீதா கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு சிவக்குமார் தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story