பொள்ளாச்சியில் போலீசார் அஞ்சலி


பொள்ளாச்சியில் போலீசார் அஞ்சலி
x
தினத்தந்தி 8 July 2023 8:30 PM GMT (Updated: 8 July 2023 8:30 PM GMT)

பொள்ளாச்சியில் போலீசார் அஞ்சலி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தனிப்பிரிவு போலீசார், போக்குவரத்து போலீசார் மறைந்த டி.ஐ.ஜி. உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று கோட்டூர், வால்பாறை, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திலும் டி.ஐ.ஜி. உருவப்படத்துக்கு போலீசார் அஞ்சலி செலுத்தினர்.


Related Tags :
Next Story