சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x

தஞ்சையில் விபத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 54). இவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருந்தார். நள்ளிரவில் நாஞ்சிக்கோட்டை ரோடு கருணாவதிநகர் ஆர்ச் அருகே வந்தபோது சாலை பணிக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story