தென்காசியில் போலீசார் திடீர் சோதனை


தென்காசியில் போலீசார் திடீர் சோதனை
x

தென்காசியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் Storming Operation என அழைக்கப்படும் அதிரடி குற்றத் தடுப்பு வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸா இருக்கும் பல்வேறு பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் 51 தங்கும் விடுதிகள் சோதனை இடப்பட்டன. குற்ற சரித்திர பதிவேடு துவங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் 16 ரவுடிகள் மீது குற்ற முன்னெச்சரிக்கை தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தீவிர வாகன சோதனை செய்து சாலை விதிமீறல்களை மீறி குடிபோதை, அதிவேகம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமை போன்ற விதி மீறியதில் 467 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.. மேலும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 62 குற்றவாளிகளின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story