கடலூரில் மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு
கடலூரில் மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூர்
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு பதறிய அவர் கடைக்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. மேலும் கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story