45 கிலோ கஞ்சா கடத்திய‌ இளைஞர்கள் கைது; பணம் மற்றும் சரகம் வாகனம் பறிமுதல்


45 கிலோ கஞ்சா கடத்திய‌ இளைஞர்கள் கைது; பணம் மற்றும் சரகம் வாகனம் பறிமுதல்
x

வாழப்பாடி அருகே சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் இருவரை வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.

சேலம்:

வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கவர்கல்பட்டி பிரிவு சாலை அருகே, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர், உதவி ஆய்வாளர் கோபால் உள்ளிட்ட போலீஸார் நேற்று பகல் 1 மணி அளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் 45 கிலோ போதைப் பொருளான கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து, 45 கிலோ கஞ்சா ரொக்கப் பணம் ரூ. 90,000 மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் கஞ்சா கடத்தியதாக முத்தம்பட்டி சிஎஸ்ஐ நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), வசந்த்குமார் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வாழப்பாடி அருகே வாகன தணிக்கையில் 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story