விஷ சாராய உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்
விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்ட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story