சங்கரன்கோவிலில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்


சங்கரன்கோவிலில் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 19 Dec 2022 6:46 PM GMT)

சங்கரன்கோவிலில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

மின்கட்டண உயர்வை கண்டித்தும், திருவேங்கடம் தாலுகா மகேந்திரவாடி பஞ்சாயத்து வெங்கடாசலபுரம் கிராமத்திற்கு தனி ரேஷன் கடை அமைக்க வேண்டும், அரசு வேலையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் பால் நேரு, இணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சுவாமிதாஸ், அமல்ராஜ், கருத்த பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர தலைவர் கருப்பசாமி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சீதாராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வசந்தகுமார், பொருளாளர் மேரி புஷ்பலதா, நிர்வாகிகள் கார்த்திகேயன், கருப்பசாமி, வெங்கடேஷ், மருது பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.



Next Story