பவானியில் நடைபெறும் பா.ம.க. பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி


பவானியில் நடைபெறும் பா.ம.க. பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி
x

பவானியில் நடைபெறும் பா.ம.க. பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி தொடங்கியது.

ஈரோடு

பவானி

பவானியில் நடைபெறும் பா.ம.க. பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி தொடங்கியது.

பா.ம.க. பொதுக்கூட்டம்

ஈரோடு மாவட்டம் பவானியில் ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் அரிசி மார்க்கெட் திடலில் இன்று (சனிக்கிழமை) மலை 5 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

கட்சியின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சியின் முன்னோடிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இதற்காக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.

முன்னோடிகள்

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செங்கோட்டையன், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.சி.ஆர். கோபால், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகதீசன், மாவட்ட துணை தலைவர் சர்வேயர் வேலு, பசுமைத் தாயகம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், பவானி நகர செயலாளர் பரணீதரன், நகர தலைவர் பிரகாஷ், தேர்தல் பணி குழு பொறுப்பாளர் தினேஷ்குமார் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகள் ஈஸ்வரன், அழகப்பன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.


Related Tags :
Next Story