தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி


தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி
x

அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு தீவிர தூய்மை பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட வெள்ளைக்கோட்டை, தெற்குதெரு, திருநகரம், பாவடி தோப்பு உள்ளிட்ட 36 வார்டுகளில் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் தூய்மை நகரத்திற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் ராஜந்தினி, நகர்மன்ற துணைத்தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.நகராட்சி சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் எனது நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது எனது கடமை, தூய்மை பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் நகராட்சி சுகாதார அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story