பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

கோபாலசமுத்திரம் ஊராட்சி, அரசு கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சி மற்றும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி துணை அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி செயலாளர் ஸ்ரீதர், கல்லூரி துறை தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். புத்தூர் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பொதுமக்களிடைேய விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி கல்லூரியை வந்தடைந்தது. இதில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

-----


Next Story