நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 24 Aug 2023 1:00 AM GMT (Updated: 24 Aug 2023 1:00 AM GMT)

மாவட்டம் முழுவதும் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிற இடங்கள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல்

செங்குறிச்சி, வடமதுரை

கொசவப்பட்டி, செங்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கொசவப்பட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பப்பட்டி, கவராயப்பட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் தெற்கு உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வடமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது. இதையொட்டி வடமதுரை, புத்தூர், போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மக்குண்டு, சீத்தப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

செந்துறை, கோவிலூர்

செந்துறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, மாமரத்துபட்டி, ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோசுகுறிச்சி, கம்பிளியம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்காட்டூப்பட்டி, சின்னராசிபுரம், மணக்காட்டூர், அடைக்கனூர், தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்தகுளத்துப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கோவிலூர் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி மற்றும் வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, கோவிலூர் உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story