இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

பராமரிப்பு பணி காரணமாக நாகை மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

பராமரிப்பு பணி காரணமாக நாகை மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பு பணி

நாகை வடக்கு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீலா வீதி, கடற்கரை சாலை, கடைத்தெரு, பெருமாள் கோவில்தெரு, தேவி தியேட்டர் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று மின்சார நிறுத்தம்

இதேபோல பிரதாபராமபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பிரதாபராமபுரம், திருப்பூண்டி, மூலைக்கடை, சிந்தாமணி, காரப்பிடாகை, சடையன்கோட்டகம் ஆகிய பகுதிகளுக்கும், சிக்கல் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வங்காரமாவடி, பெருங்கடம்பனூர் ஆகிய பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் இருக்காது.

திருக்குவளை துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருக்குவளை நகரப்பகுதிக்கும், தேவூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ராதாமங்கலம், வெண்மணி, கிள்ளுக்குடி ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை நாகை தெற்கு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெளிப்பாளையம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை நகர்ப்புற துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வெளிப்பாளையம், அரசு ஆஸ்பத்திரி பகுதி, காடம்பாடி, பால்பண்ணைச்சேரி, மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதி, நாகூர் தர்கா பகுதிகளுக்கும், நரிமணம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கொட்டாரக்குடி, பூதங்குடி, நரிமணம், உத்தமசோழபுரம், வைப்பூர், சூனூர் பகுதிகளுக்கும், திருமருகல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருமருகல், பொறக்குடி, போலகம், திருக்கண்ணபுரம், திருப்புகளுர், மருங்கூர், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஏர்வாடி மற்றும் சேஷமூலை பகுதிகளுக்கும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திட்டச்சேரி- வேளாங்கண்ணி

திட்டச்சேரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திட்டச்சேரி, ப.கொந்தகை, பனங்குடி, மரைக்கான்சாவடி, குத்தாலம், வாழ்மங்களம் பகுதிகளுக்கும், கீழ்வேளுர் துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளுர், தேவூர், ஆழியூர், அகரகடம்பனூர், கோகூர், கூத்தூர், கிள்ளுக்குடி பகுதிகளுக்கும், வேளாங்கண்ணி துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேளாங்கண்ணி, கிராமத்துமேடு, தெற்குபொய்கை நல்லூர், பிரதாபராமபுரம், வேட்டைகாரனிருப்பு துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் விழுந்தமாவடி, திருப்பூண்டி, நாலுவேதபதி மற்றும் புதுப்பள்ளி பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேதாரண்யம்

வேதாரண்யம், வாய்மேடு, துணைமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் வேதாரண்யம் நகர் மற்றும் வாய்மேடு, துளசியாப்பட்டினம், சேதுரஸ்தா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story